/* */

யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த கோவை மாற்றுத்திறனாளி இளைஞர்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் இந்திய அளவில் 750 இடத்தை ரஞ்சித் பெற்று அசத்தியுள்ளார்.

HIGHLIGHTS

யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த கோவை மாற்றுத்திறனாளி இளைஞர்
X

ரஞ்சித்.

கோவை ஹோப்காலேஜ் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் - அமிர்தவள்ளி தம்பதியினர். இவர்களது இரண்டாவது மகன் ரஞ்சித் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி. இவர் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்த நிலையில், யுபிஎஸ்சி தேர்வு எழுதியிருந்தார். இந்த தேர்வு முடிவுகளில் இந்திய அளவில் 750 இடத்தை ரஞ்சித் பெற்று அசத்தியுள்ளார்.

கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்த போது காம்பஸ் இன்டர்வியூவில் செவித் திறன் குறைபாட்டை காரணம் காட்டி நிராகரித்தாகவும், தன்னுடைய திறமையை நிருபிக்க தொடர்ந்து முயன்று யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ரஞ்சித் தெரிவித்தார். பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைவாக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும், மாற்று திறனாளிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன் எனவும் ரஞ்சித் தெரிவித்தார். குடிமைப் பணி தேர்வில் வென்ற ரஞ்சித்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல பல்வேறு தரப்பினரும் ரஞ்சித்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 25 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  5. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  6. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  9. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்