/* */

கோவையில் இறைச்சி, மளிகைக்கடைகளில் கூட்டம்: சமூக இடைவெளியுடன் காத்திருந்த மக்கள்!

கோவையில், வழக்கமான நாட்களை விட இன்று, இறைச்சிக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் கணிசமாக அதிகரித்திருந்தது.

HIGHLIGHTS

கோவையில் இறைச்சி, மளிகைக்கடைகளில் கூட்டம்: சமூக இடைவெளியுடன் காத்திருந்த மக்கள்!
X

கோவை நஞ்சுண்டாபுரத்தில் இறைச்சி வாங்குவதற்காக, சமூக இடைவெளியுடன் காத்திருந்த மக்கள். 

தமிழ்நாட்டில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மளிகை, காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகள் மட்டும் நேர கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவையில் உள்ள மளிகை, காய்கறி மற்றும் இறைச்சிக்கடைகளில் வழக்கமான நாட்களை விட ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று, வாடிக்கையாளர் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம், புளியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட இறைச்சி விற்பனையகங்கள் மற்றும் மளிகை கடைகளில் அதிக கூட்டம் காணப்பட்டது.

எனினும், ஒருசில இடங்கள் தவிர பெரும்பாலான பகுதிகளில், வாடிக்கையாளர்கள் அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தனிநபர் இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சி மற்றும் மளிகைப்பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Updated On: 13 Jun 2021 8:09 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?