/* */

பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் களைகட்டிய விற்பனை

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் வழக்கத்தை விட சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தது.

HIGHLIGHTS

பொள்ளாச்சி  மாட்டுச்சந்தையில் களைகட்டிய  விற்பனை
X

பைல் படம்

பொள்ளாச்சி மாட்டு சந்தையானது மொத்தம் 6.25 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாக இருந்தது. இதில், பாதாள சாக்கடை கழிவு நீர் கால்வாய் ஆகிய திட்டங்கள் 2. ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்சமயம் 4.25 ஏக்கர் பரப்பளவில் தற்போது மாட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடை பெறுவது வழக்கம். அதன்படி நேற்று சந்தை நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து விற்பனைக்காக மாடுகள் கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில் வருகிற 22-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் வழக்கத்தை விட சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் பொள்ளாச்சி மாட்டு சந்தை களைகட்டியது.

மாட்டுச்சந்தைக்கு கோவை மாவட்டம் மட்டுல்லாது வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில் வருகிற 22- ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் வழக்கத்தை விட சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தபோதிலும் விலை குறையவில்லை. சிலர் விவசாய பணி மற்றும் வளர்க்க மாடுகளை வாங்கிச்சென்றனர். மேலும் இறைச்சிக்காக கேரளாவில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி சென்றனர். இதில், காங்கேயம் காளை அதிக பட்சமாக ரூ.65 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் விலைக்கு விற்பனை ஆனது.

கடந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில் வருகிற 22-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் கடந்த வாரத்தை விட நேற்று வரத்து அதிகரித்து ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வந்தன. கேரளாவில் இருந்து சுமார் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கு வந்திருந்தனர். இதனால் விற்பனையும் விறு, விறுப்பாக நடந்தது. வரத்து அதிகரித்தும் விலை குறையவில்லை. விவசாய தேவைகளுக்கு சிலர் மாடுகளை வாங்கி சென்றனர். மேலும் இறைச்சிக்காக கேரளாவில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர்.

காங்கேயம் காளை ரூ.65 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் வரையும், பசு மாடு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையும், மொரா ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரையும், செர்சி ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. வரத்து அதிகரித்தும் கடந்த வாரத்தை விட மாடுகள் விலையும் அதிகரித்து இருந்தது. இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.



Updated On: 19 April 2023 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு