/* */

வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பிய வாலிபரை மடக்கிப் பிடித்த பொள்ளாச்சி போலீசார்

வாலிபர்கள் மிரட்டி மாருதி கார் மற்றும் 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

HIGHLIGHTS

வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பிய வாலிபரை மடக்கிப் பிடித்த பொள்ளாச்சி போலீசார்
X

ராபின், அருள்ராஜ், சேவாக், மாரியப்பன் 

உடுமலை தளி பகுதியில் மாமரத்துபட்டி தென் குமாரபாளைத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரிடம் நேற்று வாலிபர்கள் மிரட்டி அவர் வைத்திருந்த மாருதி கார் மற்றும் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து தங்கராஜ் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் கண்ட்ரோல் ரூமுக்கு வாலிபர்கள் தப்பிச் செல்வதாக தகவல் அளித்தனர். கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வரத்தினம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி அறிவுறுத்தலின்படி, ஹைவே பேட்ரோல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பொள்ளாச்சி திப்பம்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது மாருதி கார் ஒன்று நிற்காமல் வேகமாக சென்றது.

போலீசார் சினிமா பாணியில் மாருதி காரை பின்தொடர்ந்து சின்னபாளையம் பகுதியில் காரை மடக்கி பிடித்தனர்‌. போலீசார் விசாரணையில் தங்கராஜ் இடம் கார் மற்றும் 3 பவுன் பறித்த ராபின், அருள்ராஜ், சேவாக், மாரியப்பன் என விசாரணையில் தெரிய வந்தது. கார் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து தளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், போலீசார் 4 பேரை அழைத்துச் சென்று வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சினிமா பாணியில் வாகனத்தில் வேகமாகச் சென்று மடக்கி பிடித்த காவலர்களுக்கு அப்பகுதியினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 17 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!