/* */

பொள்ளாச்சி மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

பொள்ளாச்சியில் உள்ள மருந்து கடைகளில் மருந்துகள் ஆய்வாளர் தலைமையில் திடீரென ஆய்வு நடத்தினர்.

HIGHLIGHTS

பொள்ளாச்சி மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
X

பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் மருத்துவர்களின் அனுமதி சீட்டு இல்லாமலும், காலாவதியான மருந்துகள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி நகர மேற்கு காவல் ஆய்வாளர் மணிக்குமார், பொள்ளாச்சி சரக மருந்துகள் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பொள்ளாச்சி பகுதிகளில் மொத்தம் 11 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது மருத்துவர்களின் அனுமதி சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.

இதுகுறித்து பொள்ளாச்சி சரக மருந்துகள் ஆய்வாளர் ராஜேஷ் கூறுகையில், மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் குருபாரதி அறிவுறுத்தலின் பேரில் பொள்ளாச்சி கோட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. போதை தரும் இருமல் டானிக், மாத்திரைகள், தூக்க மாத்திரைகள், வலி நிவாரண மாத்திரைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. மேலும் கடைகளில் அந்த வகையான மருந்துகள் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டன.

இதற்கிடையே மருத்துவர்களின் அனுமதி சீட்டு இல்லாமல் மருந்து சீட்டு வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவர்களின் அனுமதி சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கூறினார்

Updated On: 14 May 2023 5:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்