/* */

கோவை வனப்பகுதியில் கூடுதலாக 1049.73 ஹெக்டேர் நிலம் சேர்ப்பு:கலெக்டர் நடவடிக்கை!

கோவை வனக்கோட்டம் 69000 ஹெக்டேராக இருந்த நிலையில், தற்போது 70049 ஹெக்டேராக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

கோவை வனப்பகுதியில் கூடுதலாக 1049.73 ஹெக்டேர் நிலம் சேர்ப்பு:கலெக்டர் நடவடிக்கை!
X

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனுக்கு புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் 69000 ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் வனத்தையொட்டிய பகுதிகள் அதிகமுள்ளன. இப்பகுதிகளை வனப்பகுதியுடன் இணைத்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக வனப்பகுதியின் அளவு 1049 ஹெக்டேர் விரிவடைந்தது.

யானை வழித்தடமாக இருக்கும் மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 50.79 ஹெக்டேர் நிலத்தை தனியார் வனமாக மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்திரவிட்டுள்ளார்.1949 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இப்பகுதி கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் மூலம் மாநிலத்தின் முதல் யானைகள் வழித்தடம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்தில் யானைகளின் வழித்தடத்தை மீட்டு நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் நாகராஜனுக்கு வனத்துறை ஊழியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கோவை வனக்கோட்டம் 69000 ஹெக்டேராக இருந்த நிலையில், தற்போது 70049 ஹெக்டேராக உயர்ந்துள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனுக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் புத்தகம் வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

Updated On: 10 Jun 2021 6:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி