/* */

மேட்டுப்பாளையம் அருகே துரிதமாக நடைபெறும் தடுப்பணை கட்டுமானப்பணிகள்

பெரியபள்ளம் பகுதியில் ரூ. 2. 67 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியானது கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது

HIGHLIGHTS

மேட்டுப்பாளையம் அருகே துரிதமாக நடைபெறும்  தடுப்பணை கட்டுமானப்பணிகள்
X

தோளம்பாளையம் தடுப்பணை பாலம் கட்டுமான பணி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் இருந்து வெள்ளியங்காடு செல்லும் பாதையில் பெரியபள்ளம் பகுதியில் ரூ. 2. 67 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியானது கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.

இந்த நிலையில் தடுப்பணை கட்டும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதனால் தற்போது 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் 10 நாள்களில் தடுப்பணை கட்டும் பணிகள் நிறைவு பெவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழவில், நீர்வழிப் பாதையில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: - தோலம்பாளையம் பெரியபள்ளம் பகுதியில் தடுப்பணை கட்டினால் மழைக்காலங்களில் வீணாகும் மழை நீரை சேமித்து வைக்க இயலும். இதனால் தோலம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயம் செழிக்கும். இதனால் பெரியபள்ளம் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தாங்கள் தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வந்தததை, ஏற்று அப்பகுதியில் தடுப்பணை கட்ட அரசு நிதி ஒதுக்கி அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தடுப்பணை கட்டப்பட்டு வரும் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் புதர் மண்டி காணப்படுகிறது. இதனை அகற்றினால் மட்டுமே இப்பகுதியில் தடுப்பணை கட்டுவதன் நோக்கம் முழுமையாக நிறைவேறும். அதனை செய்யாமல் தடுப்பணை கட்டி முடிப்பதால் எதிர்பார்க்கும் பயன் எப்படி கிடைக்கும் என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது என்றனர்.

Updated On: 19 April 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...