/* */

தடுப்பூசி டோக்கன் வழங்கலில் குளறுபடி - கோவையில் பொதுமக்கள் மறியல்

கோவை, அரிசிபாளையத்தில், தடுப்பூசி டோக்கன்கள் குறைவாக வழங்கப்பட்டதாகக்கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தடுப்பூசி டோக்கன் வழங்கலில் குளறுபடி - கோவையில் பொதுமக்கள் மறியல்
X

கொரோனா தடுப்பூசிக்கான டோக்கன் வழங்கலில் குளறுபடி நடப்பதாகக்கூறி,  கோவை மாவட்டம் அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். மாவட்டத்தில், 124 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேநேரம், ஒருசில இடங்களில் தடுப்பூசிகள் போடுவதற்கு குறைவான டோக்கன்கள் கொடுப்பதாகவும், தடுப்பூசிகளை ஊராட்சி மன்ற தலைவர் காசுக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி போடுவதற்கு குறைவான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமரச பேச்சு நடத்தி கலைத்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 250 தடுப்பூசிகள் வீதம் போடப்படுவதாக கூறப்பட்ட நிலையில், 40 டோக்கன்கள் மட்டும் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள் சுகாதாரத் துறையிரிடமும், திமுக ஊராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அரிசிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தடுப்பூசிகளை தனியாருக்கும், கட்சியினருக்கும் பணத்திற்கு விற்பதாக சிலர் குற்றம்சாட்டினர். முறையாக தடுப்பூசி செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

Updated On: 4 Jun 2021 7:27 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...