/* */

விரைவில் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் துவங்கப்படும்: உதயநிதி

கூட்டமாக திரண்டிருப்பதை பார்க்கும் போது கண்டிப்பாக திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கொடுப்பீர்கள் என தெரிகிறது.

HIGHLIGHTS

விரைவில் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் துவங்கப்படும்:  உதயநிதி
X

 உதயநிதி ஸ்டாலின்.

கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கோவை சுந்தராபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். எல்லோரும் ஊசி போட்டீர்களா எனக்கேட்டு பேச்சை துவங்கிய அவர், இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலே போதுமானது என தெரிவித்தார். கூட்டமாக திரண்டிருப்பதை பார்க்கும் போது கண்டிப்பாக திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கொடுப்பீர்கள் என தெரிகிறது எனக்குறிப்பிட்ட அவர், ஆனால் கோவை மாவட்ட மக்களை நம்பவில்லை எனக் கூறினார். வாக்களித்து வெற்றி பெறச்செய்வோம் என சொல்றீங்க, செஞ்சீங்களா என கேள்வி எழுப்பினார்.

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற போதும் கோவை மாவட்ட மக்கள் ஏமாத்திட்டீங்க எனக்குறிப்பிட்ட அவர், ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்துள்ளார் என தெரிவித்தார். அதிமுக ஆட்சி வீட்டில் மக்களை முடக்கியது தான் அவர்களின் சாதனை எனவும் ஆனால் உயிரிழப்புகளை தடுக்க 7 கோடி தடுப்பூசிகளை போட்டது திமுக தான் எனவும் அதிமுக ஒரு கோடி தடுப்பூசி தான் போட்டார்கள் எனவும் இது போன்ற திட்டங்களால் தான் தனியார் நாளிதழ் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இந்தியாவின் நம்பர் ஒன் சி.எம் ஸ்டாலின் தான் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சி முடிந்து செல்லும் போது கஜனாவில் 6 லட்சம் கோடி கடனை வைத்து சென்றனர் எனவும் ஆனாலும் திமுக ஆட்சியமைந்தவுடன் பால் விலை குறைப்பு, இலவச பேருந்து பயணம் பெண்களுக்கு, என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் கண்டிப்பாக நிதிநிலை சரி செய்யப்பட்டு விரைவில் பெண்களுக்கு மாதாமாதம் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கும் திட்டம் துவங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒரு போதும் காலூன்ற முடியாது என ராகுல் மோடிக்கு சவால் விட்டுள்ளார் எனவும் இதற்கு காரணம் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சிம்ம சொப்பனமாக ஸ்டாலின் விளங்குகிறார் என்பதாலேயே எனவும் தெரிவித்தார். இந்த முறை நம்பலாமா? என கேள்வி எழுப்பிய அவர் ஊழல்மணிக்கு சாவுமணி அடிப்பது நிச்சயம் எனவும் ஏற்கனவே 110 கோடி ரூபாயை முடக்கியுள்ளோம் எனவும் தெரிவித்தார். வெள்ளலூர் குப்பைக்கிடங்கு இடம் மாற்றப்படும் எனவும் 27 அமாவாசை தான் திமுக ஆட்சி என எடப்பாடி பழனிசாமி கூறி வருவதாகவும் ஆனால் தமிழகத்தில் உள்ள 2 அமாவாசைகள் யார் என்பது உங்களுக்கு தெரியும்,இருவரையும் அனுப்பிவிட்டீர்கள், ஆனால் ஓட ஓட விரட்ட வேண்டும் என்பதற்காக திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Updated On: 17 Feb 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்