/* */

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள்: கோவையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

கோவையில், குழந்தைத்தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

HIGHLIGHTS

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள்: கோவையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
X

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்திட, உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் நாள் நாடு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அவ்வகையில், கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், குனியமுத்தூர், காந்திபுரம், கரும்புக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. கொரோனா கால ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி சமூக விலகலுடன் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் தலைமையில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், கல்வி பயின்று, மிளிர வேண்டிய குழந்தை பருவத்தில், வேலைக்கு சென்று பளுவினைச் சுமக்கும் குழந்தைகளை, குழந்தைத் தொழிலாளர் முறையில் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உறுதி செய்ய தமிழக அர்சு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருகிறது. சமுதாயத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை வழங்க, பல்சமய நல்லுறவு இயக்கம் முன் வரும் என அவர் தெரிவித்தார்.

Updated On: 12 Jun 2021 7:05 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  4. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  5. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  6. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  7. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  8. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  9. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  10. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...