/* */

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகளுக்கு தடை

அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோவை குற்றால நீர் வீழ்ச்சி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்

HIGHLIGHTS

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகளுக்கு தடை
X

கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் விளங்கி வருகிறது. கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இது அமைந்துள்ளது. மேலும், நாள்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இதனிடையே தென்மேற்குப் பருவ மழை காரணமாக, கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மிதமான மழையும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. கோவை குற்றாலத்தில் கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி கோவை குற்றால நீர் வீழ்ச்சி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் அங்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை குறைந்து இயல்பான நிலைக்குத் திரும்பிய பின்னரே கோவை குற்றாலம் திறக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Updated On: 5 July 2023 8:48 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...