/* */

ஆழியாறு அணையில் வண்டல் மண் எடுக்க தடை: ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் வண்டல் மண் எடுக்க தடை விதித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

HIGHLIGHTS

ஆழியாறு அணையில் வண்டல் மண் எடுக்க தடை: ஆட்சியர் உத்தரவு
X

ஆழியாறு அணை - கோப்புப்படம் 

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதை தவிர கேரளாவுக்கு ஒப்பந்தப்படி தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அணையை ஆழப்படுத்தவும், தூர்வாரும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்தது.

இதை தொடர்ந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் அணையில் கடந்த ஒரு மாதமாக அணையில் இருந்து லாரிகள் மூலம் மண் எடுத்து விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரு லாரிக்கு 4 யூனிட் வீதம் ஒரு லோடுக்கு ரூ.400 வீதம் வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில் அணையில் இருந்து மண் எடுப்பதை நிறுத்த கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் வண்டல் மண் மற்றும் மண் ஆகியவற்றை விவசாய பயன்பாட்டிற்கு வெட்டி எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி மண் எடுப்பதற்கான ஆணைகளை பெற்று விவசாய பயன்பாட்டிற்கு தற்போது வரை மண் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனைமலை தாலுகா ஆழியாறு அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட கன அளவு முழுமையாக எடுக்கப்பட்டு விட்டது. அதன்படி 67 ஆயிரம் கன மீட்டர் மண் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, ஆழியாறு அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வழிவகை இல்லை. இதனால் அணையில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்ற ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து மண் எடுப்பது நிறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்

Updated On: 10 Jun 2023 6:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்