/* */

கோவையில் ஒரு மணி நேரம் கனமழை ; வெள்ளநீரில் சிக்கிய வாகனங்கள்

கோவையில் இன்று மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் கார், பேருந்து சிக்கியது

HIGHLIGHTS

கோவையில் ஒரு மணி நேரம் கனமழை ; வெள்ளநீரில் சிக்கிய வாகனங்கள்
X

அரசு மருத்துவமனை சுரங்கப்பாதையில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து

வட கிழக்கு பருவ மழை காரணமாக கோவையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையில் இன்று மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது‌. ரயில் நிலையம், காந்திபுரம், லட்சுமி மில், புளியகுளம் ,வடவள்ளி, இடையர்பாளையம், டவுன்ஹால், பெரிய கடை வீதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.அனைத்து சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் அவிநாசி சாலை மேம்பாலம், கிக்கானி பள்ளி, கோவை அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கப் பாதைகளில் வெள்ள நீர் தேங்கியதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. அவிநாசி சாலை மேம்பால சுரங்கப்பாதையில் ஒரு காரும், அரசு மருத்துவமனை சுரங்கப்பாதையில் ஒரு பேருந்தும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அவற்றை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. பல பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது.இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

Updated On: 4 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...