/* */

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக வளாகத்தில் திடீர்  தீ விபத்து
X

கோவை மாநகராட்சி மத்திய மண்டபல பழைய கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து  ஏற்பட்டது.

கோவை பந்தய சாலை பகுதியில் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் பிரதான கட்டிடத்தின் அருகில் உள்ள பழைய கட்டிடத்தில் சுகாதார பிரிவுக்கான பிளிச்சிங் பவுடர் , பினாயில், ஆசிட் உட்பட பல்வேறு பொருட்கள் வைக்கப்படும் அறையும் உள்ளது. மேலும் அந்த கட்டிடத்தில் பல்வேறு ஆவணங்களும் வைக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென அந்த கட்டிட்டத்தில் .இன்று திடீரென தீ பிடித்தது.

பழைய கட்டிடத்தில் ஏற்பட்ட தீ காரணமாக கடும் நெடியுடன் புகை வெளியேறியது. அந்த அலுவலகம் மற்றும் பிரதான அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அனைத்தனர்.

இந்த தீ விபத்தில் பழைய கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் , ஆவணங்கள் எரிந்து சேதமானது. கடும் நெடியுடன் புகை வெளியேறியதால் பொதுமக்கள் சிறிது நேரம் சுவாசிக்க சிரமப்பட்டனர். தீ அணைக்கப்பட்ட நிலையில் இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Aug 2022 6:50 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு