/* */

கோவையில், மாணவர் துாக்கிட்டு தற்கொலை

கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் முதலாமாண்டு பயின்ற மாணவர், விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கோவையில், மாணவர் துாக்கிட்டு தற்கொலை
X

கோவையில்,  வேளாண் பல்கலை.,யில்  முதலாமாண்டு பயின்ற மாணவர், விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பஸ் கண்டக்டர் பழனி. இவரது மகன் பிரோதாஸ் குமார் (19) கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்தார். இவர், இளங்கலை வனவியல் (Bsc. Forestry) பட்டப்படிப்பு படிக்க விரும்பிய நிலையில், அது கிடைக்காமல், பயோ டெக் படித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் தங்கியிருந்த விடுதியில் துாக்கு போட்டு உயிரிழந்தார். தகவலறிந்து அங்குவந்த போலீசார், மாணவரின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், விருப்பப்பட்ட துறை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மாணவர் பிரோதாஸ் குமார் ஏற்கனவே ஒருமுறை வீட்டில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மாணவர் தற்கொலை குறித்து, விடுதியில் தங்கியிருந்த பிற மாணவர்கள், அவரது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Aug 2022 1:43 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  3. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  4. சினிமா
    டைட்டானிக், அவதார் சாதனைகளை முறியடிக்கும் கில்லி...! என்னண்ணே...
  5. வீடியோ
    2 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் Congress | Amitshah-வின் அதிரடி...
  6. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  7. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  8. காஞ்சிபுரம்
    தேர்தல் ஆணையம் தனது கடைமையை ஒழுங்காக செய்யவில்லை - கடம்பூர் ராஜு
  9. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  10. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...