/* */

குட்கா பொருட்கள் விற்பனையில் போலீசாருக்கு தொடர்பிருந்தால் கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

Coimbatore News Today in Tamil - குட்கா பொருட்கள் விற்பனையில் காவல்துறையினருக்கு ஏதேனும் தொடர்பிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை எஸ்பி எச்சரிக்கை.

HIGHLIGHTS

குட்கா பொருட்கள் விற்பனையில் போலீசாருக்கு  தொடர்பிருந்தால் கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை
X

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்.

Coimbatore News Today in Tamil - கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகரில் குட்கா பொருட்களை தடை செய்வதற்காக நேற்று 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பள்ளிகள் அருகில் குட்கா பொருட்களை விற்பனை செய்த 23 பேரை கைது செய்துள்ளனர் என்றும், 35 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இது போன்று விற்பனையில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

இது போன்று விற்பனை எங்காவது நடைபெற்றால் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கும் படி கேட்டுகொண்டார். மேலும் பள்ளி முதல்வர்கள் ஆசிரியர்களை அழைத்து இது பற்றிய விழிப்புணர்வை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். பள்ளி அருகில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் போக்சோ தடுப்பு சட்டம் குறித்தும் எடுத்து கூறியதாக தெரிவித்தார். குட்கா விற்பனையில் காவல் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பின் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் ஒரு வார காலத்தில் 20க்கும் மேற்பட்ட கஞ்சா விற்பனையாளர்களின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இரு சக்கர வாகன திருட்டு குறித்தும் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும், கோவை மாநகரில் ஆட்டோ ஓட்டுநர்கள் கணக்கெடுப்பு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். தனியார் பேருந்து ஊழியர்கள் ரகளையில் ஈடுபடுவதாக சில செய்திகள் வந்துள்ளது என்றும், இரவு நேரத்தில் ரோந்து பணிகளை தீவிரப்ப்டுத்த உள்ள்தாகவும் கூறினார்.

காந்திபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற சம்பவத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், தெரிவித்தார். தனியார் பேருந்துகளில் அதிகளவு ஊழியர்கள் இருப்பதாக தெரிவித்தற்கு பதிலளித்த அவர், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த காவல்துறை தரப்பில் இருந்து போதிய உதவிகள் செய்வதாகவும் அப்படியிருக்க சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டால் வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Jun 2022 8:48 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  6. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  7. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  8. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  9. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  10. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...