/* */

இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயணம்: கோவை ஆட்சியர் துவக்கி வைப்பு

மாவட்டம் தோறும் சுமார் 30 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு பயணத்தில் 6 கலை குழுக்கள் பங்கேற்றுள்ளன.

HIGHLIGHTS

இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயணம்: கோவை ஆட்சியர் துவக்கி வைப்பு
X

விழிப்புணர்வு கலை பயணத்தை துவக்கி வைத்த ஆட்சியர் சமீரன்.

தமிழக முதல்வர் இல்லம் தேடி கல்வி திட்டத்தை சில தினங்களுக்கு முன் அறிவித்தார். அத்திட்டம் குறித்தான சில சந்தேகங்கள் மக்களிடையே காணப்பட்டது. எனவே தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நடத்த திட்டமிடப்பட்டு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இத்திட்டம் குறித்தான விழிப்புணர்வு கலைப்பயண வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்டம் தோறும் சுமார் 30 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு பயணத்தில் 6 கலை குழுக்கள் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளனர். குறிப்பாக கிராம புறங்களில் அதிக கவனம் செலுத்தி விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது. இந்த கலை பயணத்தை மேற்கொள்ள உள்ள கலைக்குழுவினருக்கும் கல்வி துறையினருக்கும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட கல்வி துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Nov 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  2. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  3. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  4. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  5. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  8. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  9. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  10. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து