/* */

கோவையில் காலாவதியான உணவுப் பொருள்கள் குளிர்பானங்கள் பறிமுதல்

கோவையில் உணவு பாதுகாப்புத்துறையினர் நான்கு நாள்கள் மேற்கொண்ட அதிரடி சோதனை மேற்கொண்டு காலாவதியான பொருள்களை பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

கோவையில் காலாவதியான உணவுப் பொருள்கள் குளிர்பானங்கள் பறிமுதல்
X

பைல் படம்

கோவையில் நடத்தப்பட்ட கள ஆய்வில் 38 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையாளர் மற்றும் ஆட்சியர் ஆகியோரது உத்தரவின் பேரில், கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய எட்டு குழுக்கள், கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

பழச்சாறு கடைகள், குளிர்பான விற்பனை கடைகள், பேக்கரி, பானி பூரி கடைகள் மற்றும் தற்காலிக தள்ளுவண்டிகளில் பொது மக்களுக்கு விற்கப்படும் பதநீர், இளநீர், கம்மங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்களை விற்பனை செய்பவர்களையும், உணவு வணிகர்கள் உணவுப் பொருட்களின் தரம், காலாவதி தேதி மற்றும் கலப்படம் தொடர்பாகவும் பேருந்து நிலைய பகுதிகள், ரெயில்வே நிலையம், அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, திருச்சி ரோடு, விளாங்குறிச்சி ரோடு, மசக்காளிப்பாளையம் ரோடு, காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, கணபதி, ஆர். எஸ். புரம், சூலூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர், துடியலூர், சரவணம்பட்டி, ராமநாதபுரம், குனியாமுத்தூர் போன்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகள் மற்றும் கோவை மாவட்டம் முழுவதும் திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

18 கடைகளுக்கு நோட்டீஸ்..

கள ஆய்வு செய்யப்பட்ட 270 கடைகளில் 38 கடைகளில் ரூ. 15, 225- மதிப்புள்ள 51 கிலோ பழ வகைகள் மற்றும் பேக்கிங் தேதி போடாமலும் மற்றும் காலாவதியான நிலையில் விற்பனைக்கு வைத்திருந்த 47 லிட்டர் குளிர்பானங்கள் கண்டறியப்பட்டு உடனடியாக பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

மேலும் மேற்படி காலாவதியான நிலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த 18 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் இக்கள ஆய்வின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவு தரம் இல்லாத பிளாஸ்டிக் கவர்கள் உபயோகத்தில் இருந்தது கண்டறியப்பட்டு அவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. அதனை வைத்திருந்த 8 கடைகளுக்கு மொத்தம் ரூ. 16, 000- அபராதம் விதிக்கப்பட்டு அரசு கருவூலக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இக்கள ஆய்வானது தொடர்ந்து மாவட்டம் முழுவதும் திடீர் கள ஆய்வாக நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வாங்கும் பொருட்களின் தரத்தில் குறைபாடு அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதாரக் குறைபாடோ காணப்பட்டால் 94440 42322 என்ற கைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். இது தொடர்பான புகார் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

Updated On: 19 April 2023 7:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...