ஆளுனருடன் ரஜினிகாந்த் சந்திப்பை சீரியசாக எடுக்க வேண்டாம்- வைகோ பேட்டி
ஆளுனருடன் ரஜினிகாந்த் சந்திப்பை சீரியசாக எடுக்க வேண்டாம் என வைகோ அளித்த பேட்டியில் கூறினார்.
HIGHLIGHTS
கோவை காந்திபுரம் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வைகோ அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கோவை மாவட்டத்தில் ம.தி.மு.க. செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ம.தி.மு.க. புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தமிழகத்தின் அரசியல் திசையை தீர்மானிக்கின்ற சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதற்கு அடையாளமாக தான் இடையிலே கோவிட் காலத்தில் நான் சுற்றுப்பயணம் செய்யவில்லை என்றாலும், தற்போது இந்த சுற்றுப் பயணத்தை கொங்கு மண்டலத்தில் தான் துவங்குகிறது. இந்த கொங்கு மண்டலத்தில் தற்பொழுது ஒரு லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர் எனவும் தமிழகம் முழுவதும் அண்ணாவின் பிறந்தநாள் விழா சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றதாகவும் தெரிவித்தார். பொருளாதார பலம் இல்லை என்றாலும் லட்சிய தாகம் உள்ளது எனவும் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் ஆளுநருடன் சந்தித்தது குறித்த கேள்விக்கு அதனை ஒன்றும் சீரியசாக எடுக்க வேண்டாம் என்றார். இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.