/* */

இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் பதிவிட்ட நபர் படுகொலை

கிண்டல் செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதில், வாலிபர்கள் அசோக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.

HIGHLIGHTS

இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் பதிவிட்ட நபர் படுகொலை
X

அசோக்குமார்.

கோவை காந்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (26). அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். திருமணமான இவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், அசோக்குமார் சம்பவத்தன்று இன்ஸ்டாகிராமில் அரிவாள் வைத்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இவர்களுக்குள் ஏற்கனவே முன்பகை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த வாலிபர்கள் நேற்று அசோக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றவே அவர்களுக்குள் கைகலப்பாக மாறியது. அப்போது வாலிபர்கள் அசோக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அசோக்குமார் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார், கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சண்முகம் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Updated On: 6 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  2. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  3. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  5. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  6. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  7. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  8. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  9. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...