/* */

கோவையில் கிணறுக்குள் பாய்ந்த கார்; கல்லுாரி மாணவர்கள் மூன்று பேர் பலி

கோவை, தொண்டாமுத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், கிணறுக்குள் விழுந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

கோவையில் கிணறுக்குள் பாய்ந்த கார்; கல்லுாரி மாணவர்கள் மூன்று பேர் பலி
X

கோவை, தொண்டாமுத்துாரில் கிணறுக்குள் விழுந்த  கார் மீட்கப்பட்டது.

கோவை வடவள்ளியைச் சேர்ந்த ரோஷன், ஆதர்ஷ், நந்தனன் மற்றும் ரவி கிருஷ்ணன் ஆகிய நான்கு பேரும் கல்லூரி மாணவர்கள். தொண்டாமுத்தூர், சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் நேற்றிரவு ஓணம் பண்டிகையை கொண்டாட சென்றனர். கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு, இன்று காலை ஐந்தரை மணியளவில், மீண்டும் வடவள்ளியை நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது மாணவர்கள் ஓட்டி வந்த கார், தென்னமநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த இரும்பு கேட்டை உடைத்துக் கொண்டு பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான 70 அடி ஆழ விவசாய கிணறுக்குள் பாய்ந்தது.


காரை ஓட்டிய ரோஷன் என்ற மாணவர், காரின் கதவை திறந்து வெளியேறி தப்பினார். மற்ற மூன்று மாணவர்களும் காருடன் கிணறுக்குள் மூழ்கி, உயிரிழந்தனர். விபத்து குறித்து தொண்டாமுத்தூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் சடலம் மற்றும் கார் மீட்கப்பட்டது.

Updated On: 9 Sep 2022 1:40 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  2. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  3. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  4. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  5. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  6. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  10. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!