/* */

நிபந்தனைகளுடன் சேவல் சண்டைக்கு அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டைக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

நிபந்தனைகளுடன் சேவல் சண்டைக்கு அனுமதி:  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
X

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கோரி இரண்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது அரசு தரப்பு கூறுகையில், சேவல் சண்டையின் போது சூதாட்டம் நடத்தப்படமாட்டாது, சேவல்கள் துன்புறுத்தப்படமாட்டாது என்று உறுதி அளித்தால் மட்டுமே இந்த சேவல் சண்டைக்கு அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், போட்டியின்போது சேவல்களை துன்புறுத்தக் கூடாது, போட்டி நடைபெறக்கூடிய இடத்தில் ஒரு கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும், போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது, சேவல்களுக்கு மது கொடுக்கக் கூடாது, அவற்றின் கால்களில் கத்தி கட்டக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

மேலும் இந்த சேவல் சண்டை போட்டியின் போது குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்றும், குறிப்பிட்ட சமூகம் அல்லது தலைவரை சித்தரிக்கும் ஃப்ளெக்ஸ் போர்டு அல்லது ஹோர்டிங்குகள் எதுவும் காட்டப்படாமல் இருப்பதை மனுதாரர் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் நிபந்தனைகளை விதித்திருக்கின்றனர்.

மேலும், தகுதியான பறவைகள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது, ஏதேனும் ஆட்சேபனைகள் எழுந்தால், அதைப் பரிசீலித்து அதற்கேற்ப முடிவெடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பங்கேற்கும் பறவைகளின் உரிமையாளர்களைத் தவிர வேறு யாரும் அந்தப் பகுதிக்குள் நுழைய தடை விதித்த நீதிமன்றம், பார்வையாளர்களுக்கு தனி இடம் வழங்குமாறும் கேட்டுக் கொண்டது

இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்து இருக்கின்றனர்.

Updated On: 15 Jan 2023 6:27 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...