/* */

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம்: மதுரைக்கு திட்டங்களை அறிவித்த முதல்வர்

அலங்காநல்லூரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும்; மீனாட்சியம்மன் கோவிலுக்கு 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

HIGHLIGHTS

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம்: மதுரைக்கு திட்டங்களை அறிவித்த முதல்வர்
X

முதல்வர் ஸ்டாலின்  

மதுரை மாவட்டத்தில் ரூ.49.74 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை, சென்னையில் இருந்தவாறே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

சங்ககால நகரமான மதுரை, இன்று நவீன மதுரையாக மாறியுள்ளது. இதைச் செய்தது திமுக அரசுதான். மதுரையில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள், திமுக ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டன. மதுரையில் விரைவில், ரூ.114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்.

அதேபோல், அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கபடும். மதுரை மத்திய சிறை, புதியதாக மாநகராட்சிக்கு வெளியே அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில், புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Updated On: 21 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு