/* */

கரூர் மாவட்ட ஆட்சியருக்கு தலைமை செயலர் பாராட்டு

ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு அரசு தொகுப்பு வீடு வழங்கிய ஆட்சியரை தலைமைச் செயலர் பாராட்டியுள்ளார்.

HIGHLIGHTS

கரூர் மாவட்ட ஆட்சியருக்கு தலைமை செயலர் பாராட்டு
X

மனு அளித்த ஒரு மணி நேரத்தில் மாற்றுத் திறனாளி குடும்பத்துக்கு அரசு தொகுப்பு வீட்டுக்கான ஆணையை வழங்குகிறார் ஆட்சியர் பிரபு சங்கர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கரூரைச் சேர்ந்த சந்திரா என்ற பெண்மணி தனது 29 வயது மாற்றுத்திறனாளி மகனுடன் வந்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கணவனால் கைவிடப்பட்ட தான், தனது வாய் பேச முடியாத கைகள் இயங்காத 29 வயது மகனுடன் வசித்து வருவதாகவும் மகனின் நிலையால் வாடகை வீடு கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் எனவே அரசு குடியிருப்பில் வீடு ஒன்றினை ஒதுக்கித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுத்த ஆட்சியர் பிரபு சங்கர் அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளத்தில் வீடு ஒன்றை ஒதுக்கி அதற்கான ஆணையை உடனடியாக அந்தப் பெண்மணியிடம் ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார்.

இதையடுத்து அதிகாரிகள் அந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தை அழைத்து சென்று அரசு ஒதுக்கிய குடியிருப்பில் குடியிருக்க வைத்தனர். மனு அளித்த ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு அரசு குடியிருப்பு வழங்கியதை அனைவரும் பாராட்டினர்.

இந்நிலையில் இது குறித்து அலுவல் ரீதியாக அறிந்து கொண்ட தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மனு அளித்த ஒரு மணி நேரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கி ஆதரவற்ற அந்த பெண்ணுக்கும், மாற்றுத்திறனாளி மகனுக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்களது நிர்வாகப் பணியை பாராட்டுகிறேன். உங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் என அந்த கடிதத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டியுள்ளார்.

Updated On: 26 Oct 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?