/* */

தமிழ்த்தன்னுரிமை இயக்கம் சார்பில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கல்

சென்னையில், தமிழ்த்தன்னுரிமை இயக்கம் சார்பில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழ்த்தன்னுரிமை இயக்கம் சார்பில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கல்
X

தமிழ்த்தன்னுரிமை இயக்கம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற விழா.

தமிழ்த்தன்னுரிமை இயக்கம் சார்பில், மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட அறுபத்தி நான்காம் ஆண்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இவ்விழாவில், மகாகவி பாரதி நூற்றாண்டு விழா நினைவு நாள் விழா, கி ஆ பெ விசுவநாதம் பிறந்தநாள் விழா, அரிமா பொறியாளர் டாக்டர் துரையரசன் பிறந்தநாள் விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்த்தன்னுரிமை இயக்கத்தலைவர் பாவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தமிழா தமிழா பாண்டியன் வரவேற்றார். துரையரசன் பேசுகையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட நாளை கொண்டாட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில், அக்னி சுப்பிரமணியன், அயன்புரம் பாபு உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில், தமிழ் மொழி, இனம், தமிழ்நாடு என வாழும் அறிஞர் பெருமக்களுக்கு, விருதுகள், சான்றிதழ்களை துரையரசன் வழங்கினார். இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான காசோலையையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் வரலட்சுமி, உலகநாதன் ரவி, ராஜேஷ் கண்ணா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Nov 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!