/* */

தமிழகத்தில் மதுக்கடை பார்களை திறக்க அனுமதி: முதல்வருக்கு சங்கத்தினர் கோரிக்கை!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை பார்கைளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

தமிழகத்தில் மதுக்கடை பார்களை திறக்க அனுமதி: முதல்வருக்கு சங்கத்தினர் கோரிக்கை!
X

சென்னை வடபழனியில் தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பரசன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதே போன்று டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 12 மாதங்கள் பார்கள் செயல்படாமல் இருந்த காரணத்தால் ரூ.1600 கோடி ரூபாய் பார் உரிமையாளர்கள், கட்டிடத்தின் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதியளிக்க வேண்டும்.

இதேபோல் டாஸ்மாக் பார்கள் டெண்டர் 2 வருடங்களுக்கு மட்டுமே அரசு சார்பாக வழங்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் பார்கள் செயல்படாமல் உள்ளதால் அதனை நீட்டித்து தரவேண்டும். உரிமை தொகையை குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Updated On: 14 Jun 2021 5:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது