/* */

வீட்டின் முன் பொங்கல் வைத்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

சென்னையில் உள்ள வீட்டின் முன் பொங்கல் வைத்து கொண்டாடினார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

HIGHLIGHTS

வீட்டின் முன் பொங்கல் வைத்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
X

சென்னையில் உள்ள தனது வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடினார் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விருகம்பாகத்தில் உள்ள தனது இல்லத்தின் வெளியில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினார். அப்போது அவர் கணவர் சௌந்தரராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் என்றும், இது தமிழர் திருநாள், நாளை தெலுங்கானாவில் பொங்கல் நிகழ்வு கொண்டாட உள்ளதாகவும் கூறினார்.

மேலும் கொரோனா காரணமாக, பொதுமக்கள் விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் அமைவதற்கு வழிவகை செய்த பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

இந்நிலையில் சித்திரை 1 அன்று தான் தமிழ் புத்தாண்டு என்றும், தான் அதைதான் எப்போதும் கொண்டாடுவேன் என்றும் பேசினார்.

அதேபோல் புதுச்சேரியில் இணக்கமான அரசு செயல்படுகிறது என்று கூறிய அவர், மருத்துவர் என்பதால் கொரோனா பணிகளை கூடுதலாக கவனித்தேன் என்றும், கூடுதல் நேரம் புதுவையில் செலவிடுகிறேன் என்றும் கூறினார். இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெருமைப்பட வேண்டுமே தவிர இதுகுறித்து அவர் வருத்தப்பட வேண்டியதில்லை என்றார்.

தொடர்ந்து பேசுகையில், எந்த மாநிலத்திற்கு சென்றாலும், நான் எப்போதும் தமிழ் மகள் தான், என்றைக்கும் உங்கள் அனைவருக்கும் அக்கா தான் என்று தெரிவித்தார்.

Updated On: 14 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி