வேளச்சேரியில் பள்ளி மாணவ ,மாணவிகளுக்கிடையே செஸ் போட்டி
Indoor Games Chess- தமிழகத்தில் 44 வது செஸ்ஒலிம்பியாட் போட்டியானது நடந்து வருகிறது. இதனையொட்டி வேளச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே செஸ் போட்டி நடந்தது.
HIGHLIGHTS
Indoor Games Chess- 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவதை தொடர்ந்து சென்னை வேளச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே சதுரங்க போட்டி நடைபெற்று வருகிறது.
சென்னை வேளச்சேரியில் உள்ள நேரு உயர்நிலை பள்ளி சார்பில் 3ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கிடையே சதுரங்க போட்டி இன்று துவங்கியது.44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருவதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.அதைத் தொடர்ந்து சென்னை வேளச்சேரி நேரு உயர்நிலை பள்ளி தாளாளர் நேரு ஏற்பாட்டில் பள்ளி மாணவர்கள் சதுரங்க போட்டியில் ஆர்வம் செலுத்தும் வகையிலும், விளையாட்டில் சிறந்த மாணவர்களை கண்டறியும் வகையிலும் இந்த போட்டியை நடத்தி வருகின்றனர்,
மேலும் மாணவர்களுக்கு சதுரங்க போட்டி விளையாட பயிற்சியும் அளித்து வருகின்றனர்.போட்டி நடைபெறவுள்ளது என்று அறிவித்ததும் ஆர்வமுள்ள மற்றும் விளையாட தெரிந்த மாணவ, மாணவியர்கள் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.இதில் வெற்றிபெறும் மாணவர்களையும், சிறப்பாக விளையாடும் மாணவர்களையும் தேர்ந்தெடுத்து முறையான பயிற்சிகொடுக்க உள்ளதாகவும், வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்க உள்ளதாகவும் பள்ளி தாளாளர் நேரு தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2