/* */

கஞ்சா விற்பனை செய்த ஆன்லைன் உணவக ஊழியர் உள்பட 3 பேர் கைது

online restaurant employee, have been arrested for selling cannabis

HIGHLIGHTS

கஞ்சா விற்பனை செய்த ஆன்லைன்  உணவக ஊழியர் உள்பட 3 பேர் கைது
X

கஞ்சா விற்பனை செய்த ஆன்லைன் உணவு நிறுவன ஊழியர்கள் மூவர் கைது செய்து அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சென்னை வேளச்சேரியில் அமேசானில் டெலிவரியில் பணி புரியும் நபர் கஞ்சா விற்பனை செய்வதாக வேளச்சேரி ஆய்வாளர் சந்திர மோகனுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அந்த நபரை கண்காணித்து, வேளச்சேரி நேருநகரில் உள்ள ரகுராம்(23), என்பவரது வீட்டில் வேளச்சேரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் போலீசார் சோதனையிட்டதில் 1.5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில்

நேருநகரை சேர்ந்த தாமோதரன்(22), ஆலந்தூரை சேர்ந்த பாஸ்கர்(59), ஆகியவரிடம் இருந்து கஞ்சா வாங்கியதாக கொடுத்த தகவலின் பேரில் மூவரையும் கைது செய்தனர், தாமோதரன் ஆன்லைன் உணவு நிறுவனத்தில் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். மூவர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 29 Jun 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  2. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  3. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  4. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  5. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  6. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்:
  7. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  8. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  9. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  10. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...