/* */

சென்னை விமானநிலையத்தில் பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில் கடத்திவரப்பட்ட பட்டை தீட்டப்படாத வைரக்கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சென்னை விமானநிலையத்தில் பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட வைரகற்கள்.

ஆப்ரிக்கா நாட்டிலிருந்து பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.

அதோடு டிஆா்ஐ மற்றும் சுங்கத்துறையினா் இணைந்த தனிப்படையினா் சென்னை சா்வதேச விமான பயணிகளை குறிப்பாக ஆப்ரிக்கா நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து சோதனையிட்டனா்.

இந்நிலையில் துபாயிலிருந்து வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான பயணிகளை கண்காணித்தபோது, அதில் மும்பையை சோ்ந்த ஒரு 35 வயது ஆண் பயணி,ஆப்ரிக்கா நாடான காங்கோவிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பயணியை தீவிர சோதனைக்குட்படுத்தினா்.அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 3 பாலிதீன் கவா்களை எடுத்து பிரித்து பாா்த்தனா். அதனுள் பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் 717.95 கேரட் இருந்ததை கண்டுப்பிடித்தனா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.11 லட்சம்.இதையடுத்து வைரக்கற்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் மும்பை பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

பட்டை தீட்டப்படாத இந்த வைரக்கற்கள்,ஆப்ரிக்கா நாடுகளில் அதிக அளவில் கிடைக்கக்கூடியது. இதை கடத்தி வந்து பட்டை தீட்டி பாலீஸ் செய்து, வைரக்கற்களுக்கான வடிவம் கொடுத்தபின்பு இதன் மதிப்பு கோடிக்கணக்கில் உயா்ந்து விடும் என்று கூறப்படுகிறது.

Updated On: 29 Dec 2021 6:17 AM GMT

Related News