/* */

கிண்டியில் சாலையில் கத்தியுடன் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய நபர் கைது

இதனால் அரை மணி நேரம் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

கிண்டியில்  சாலையில் கத்தியுடன் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய நபர் கைது
X

சென்னை கிண்டி பகுதியில் சாலையில் கத்தியைக்காட்டி மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கிண்டி பகுதியில் சாலையில் ரோட்டில் பட்டாக் கத்தியுடன் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

சென்னை கிண்டி காவல் நிலையம் அருகே, அண்ணா சாலையில் பாலத்தின் மேல் மர்ம நபர் ஒருவர் அரை நிர்வாணமாக பட்டாக் கத்தியுடன் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் கொடுத்துக் கொண்டிருந்தார்.இதனை கண்டு பயந்து போன வாகன ஓட்டிகள் சாலையில் கடந்து செல்ல அச்சமடைந்து நின்றதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் மர்ம நபரை பிடிக்க சென்றனர், போலீசாரையும் கத்தியை காட்டி மிரட்டினார். போலீசார் லேசான தாக்குதல் நடத்தி, பொதுமக்கள் உதவியோடு மடக்கி பிடித்தனர். இதனால் அரை மணி நேரம் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. விசாரணையில் பட்டாக்கத்தியுடன் வாகன ஓட்டிகளை மிரட்டியவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனது பெயரைக் கூட சொல்ல தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர். கத்தியை பறிமுதல் செய்த போலீசார் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 19 July 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?