/* */

பெசன்ட் நகர்: ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன்பலி

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில், ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் சாவு, மற்றொருவர் மாயம்.

HIGHLIGHTS

பெசன்ட் நகர்: ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன்பலி
X

ஆந்திராவை சேர்ந்தவர் சைலேஷ்பாபு (17). இவர், தரமணியில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். அவரை பார்ப்பதற்காக அவரது அண்ணன் மணிபிரகாஷ் (19) மற்றும் உறவினர் பிரணித் குமார் (16) ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.

பின்னர், 3 பேரும் சேர்ந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை வந்தனர். அங்கு சைலேஷ்பாபு, பிரணித் குமார், ஆகியோர் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி இருவரும் மாயமாகினர். இதை பார்த்து மணிபிரகாஷ் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த மீனவர்கள், நீண்ட நேரம் தேடியும் இருவரையும் மீட்க முடியவில்லை.

இதுகுறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் படகு மூலம் சென்று கடலில் தேடினர். இந்நிலையில் நேற்று காலை சைலேஷ்பாபு உடல் பட்டினப்பாக்கம் பகுதியில் கரை ஒதுங்கியது. தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாயமான பிரணித் குமாரை தேடி வருகின்றனர். இவர், ஆந்திராவில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Sep 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்