/* */

3 மாதங்களுக்கு பிறகு களைகட்டியது சென்னை உள்நாட்டு விமான நிலையம்!

3 மாதங்களுக்கு பிறகு விமானங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சென்னை உள்நாட்டு விமான நிலையம் மீண்டும் கலைகட்டத் தொடங்கியுள்ளது.

HIGHLIGHTS

3 மாதங்களுக்கு பிறகு களைகட்டியது சென்னை உள்நாட்டு விமான நிலையம்!
X

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தொற்று பீதியால் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரலில் வெகுவாக குறைந்து இருந்தது. இதனால் விமான சேவைகளும் குறைக்கப்பட்டது.

முன்னதாக 70 விமானங்கள் வரை இயக்கப்பட்டு சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை மட்டுமே பயணித்தனர். போதிய பயணிகள் இல்லாமல், தினமும் 90 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்தில் தொற்று குறைய தொடங்கியதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 வாரங்களாக பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது .

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மே இறுதி வாரத்தில் புறப்பாடு விமானங்கள் 40, வருகை விமானங்கள் 40 என மொத்தம் 80 விமானங்கள் இயக்கப்பட்டு அதில் 4 ஆயிரம் பேர் மட்டுமே பயணித்தனர். தற்போது புறப்பாடு விமானங்கள் 51 ஆக அதிகரித்து, வருகை விமானங்கள் 53 என மொத்தம் 104 விமானங்களாக உயர்ந்துள்ளது.

அதைப்போல் பயணிகள் எண்ணிக்கையும் 5 ஆயிரத்திற்கும் மேல் சென்றது, 3 மாதங்களுக்கு பிறகு இன்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கை 100யை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 Jun 2021 4:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  5. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  6. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  8. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  9. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  10. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!