/* */

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான போதை பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல்!
X

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகள், தங்கம், போதை பொருட்கள், அரிய உயிரினங்களை கடத்தி வருகின்றனர். அவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்யும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பெர்க் நகரில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இரண்டு வெளிநாட்டு பயணிகளை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது, அவர்களது சூட்கேசில் 15.6 கிலோ அளவிலான ஹெராயின் போதை பொருளை மறைத்து கடத்தி வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த சுமார் 100 கோடி மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 10 Jun 2021 11:27 AM GMT

Related News

Latest News

  1. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  2. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  3. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  4. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  5. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  6. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  7. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  8. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  9. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!