Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்வு
விளைச்சல் பாதிப்பு எதிரொலியாக, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்திருக்கிறது. இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
HIGHLIGHTS
அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறி பயிரிடுவது தொடங்கி விளைச்சல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மார்க்கெட்டுக்கு, விற்பனைக்காக கொண்டு வரப்படும் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது. காய்கறி வரத்து குறைவால், அவற்றின் விலை அதிகரித்திருக்கிறது.
இந்த மாத தொடக்கத்தில் இருந்தே காய்கறி விலை உயர்ந்தே காணப்படுகிறது. அந்த வகையில் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டிலும் காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கும், அவரை ரூ.60-க்கும், இஞ்சி ரூ.70-க்கும் விற்பனை ஆகிறது. வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.