/* */

வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று முழு அடைப்புக்கு அழைப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை, விவசாயிகள் நடத்துகின்றனர். இதற்கு திமுக ஆதரவு அளித்துள்ளது.

HIGHLIGHTS

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும், இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்புக்கு, விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' என்ற விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ள இப்போராட்டத்திற்கு, திமுக உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகம், ஆந்திரா, கேரளாவில், போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், வியாபாரிகளிடம், இப்போராட்டத்திற்கு விவசாயிகள் ஆதரவு கோரியுள்ளனர்.

ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெறலாம் என்பதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெறும் என்று, அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On: 27 Sep 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  2. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  3. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  6. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  7. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  8. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  9. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  10. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...