சென்னை திருவொற்றியூர் மணலி புதுநகரில் கள்ள நோட்டு கும்பல் கைது
சென்னை திருவொற்றியூர் மணலி புதுநகரில் கள்ள நோட்டு கும்பலை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
திருவொற்றியூர் அடுத்த மணலி புதுநகரில் கடந்த 12-ஆம் தேதி வீடு ஒன்றில் சிலர் சண்டையிடுவதாக போலீசாருக்கு வந்த தகவலையடுத்து அங்கு சென்று பார்த்த போது கள்ள நோட்டுக்களை அச்சடிக்கும் கும்பல் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து 200 ரூபாய் நோட்டுக்கள் 16 லட்சம், 3 கலர் பிரிண்டர்கள், ஒரு கார் என பறிமுதல் செய்து யுவராஜ், மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன்(33), பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இம்தியாஸ்( 24), திருவொற்றியூர் தாங்கலை சேர்ந்த ஜான் ஜோசப்(31), வியாசர்பாடியைச் சேர்ந்த ரசூல்கான்(38), செங்குன்றத்தைச் சேர்ந்த முபாரக்(46) ஆகிய 6 பேரை கைது செய்த மணலி புதுநகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், யுவராஜ், இம்தியாஸ், ரசூல்கான் ஆகிய 3 பேரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ததில், ஆட்டோ ஒன்றின் சீட்டுக்கு அடியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.இதனையடுத்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்து, 3 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இது சம்பந்தமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போன்று 200 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து குறிப்பிடதக்கது.