Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
சென்னையில் 100 கிலோ மாவா போதைப் பொருள் பறிமுதல்: தம்பதி கைது
சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரில் 100 கிலோ மாவா பறிமுதல் செய்து தம்பதியை போலீசார் கைது செய்தனர்
HIGHLIGHTS
சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் 3வது தெருவில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட போதை பொருளான மாவா விற்பனை செய்வதாக கொடுங்கையூர் காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, போலீசார் அந்த வீட்டை சோதனை செய்ததில் சுமார் 100 கிலோ எடையுள்ள மாவா விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து வீட்டில் இருந்த இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், உஷா(38) மற்றும் காளியப்பன் (45 ) ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், போதை பொருளான மாவா விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும், அரசால் தடை செய்யப்பட்ட மாவா போதை பொருளை யார் யாருக்கு எங்கு எத்தனை கிலோ விற்பனை செய்யப்பட்டது பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.