/* */

சென்னை வண்ணாரப்பேட்டையில் போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

சென்னை வண்ணாரப்பேட்டையில்  போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் கைது
X

போதை பொருள் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள்.

திருவொற்றியூர் அடுத்த வண்ணாரப்பேட்டை பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்

அப்போது வண்ணாரப்பேட்டை சீனிவாசா ரயில்வே கேட் அருகே கஞ்சா பொருட்களை விற்பனை செய்த சபீர் மற்றும் புறா கார்த்தி என்ற இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா பொருட்கள் மற்றும் ஒரு பட்டாக்கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்

இதேபோன்று டி.பி.கே தெருவில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹன்ஸ் பாக்கெட், ரெமோ பாக்கெட், கூல் லிப், உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த சையத் இம்ரான்கான் என்ற நபரை கைது செய்தனர். அதேபோன்று மாவா பாக்கெட்டுகளை விற்பனை செய்த பஷீர் என்ற நபரையும் கைது செய்தனர்

காவல்துறையினரின் அதிரடி சோதனையால் போதைப் பொருட்களை விற்பனை செய்த 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 3 April 2022 9:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்