/* */

மாநகராட்சி ஊழியருக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது

திருவொற்றியூர் அடுத்த சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், சாக்கடை எடுப்பதற்கு வண்டியை நிறுத்திய தராறில் , ஊழியரை அரிவாளில் வெட்டிய போதை ஆசாமிகள் இருவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

மாநகராட்சி ஊழியருக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட போதை ஆசாமிகள்.

திருவொற்றியூர் அடுத்த சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், சாக்கடை எடுப்பதற்கு வண்டியை நிறுத்திய தராறில் , ஊழியரை அரிவாளில் வெட்டிய போதை ஆசாமிகள் இருவரை கைது செய்தனர்.

புதுப்பேட்டை, நாகப்பன் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார்(26). இவர், சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, அம்மணி தோட்டம், நான்காவது தெருவில், சாக்கடை எடுப்பதற்கு ஊழியர்களுடன் வண்டியை நிறுத்தியிருந்தார்.

அப்போது அங்கு போதையில் வந்த தண்டையார் பேட்டை, துர்கா நகரை சேர்ந்த மோகன்(24) புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகரை சேர்ந்த சதீஷ்குமார்(21) ஆகியோர் இருவர் போதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் வினோதிடம் எத்ற்காக சாக்கடை வண்டியை வழியில் நிறுத்தி உள்ளீர்கள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஏற்பட்ட தகராறில், வினோத்குமாரை மறைத்து வைத்திருந்த அரிவாளில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் வினோத்குமாருக்கு இடது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு அவருடன் இருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார், மோகன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 21 Jan 2023 5:45 AM GMT

Related News