/* */

தலைவர் நியமனத்தால் பலகைதொட்டி குப்பத்தில் சர்ச்சை: மீண்டும் மோதல்

பலகை தொட்டி குப்பத்தில் தலைவர் நியமனத்தில் சர்ச்சை ஏற்பட்டதால் மீண்டும் மோதல் உண்டானது.

HIGHLIGHTS

தலைவர் நியமனத்தால் பலகைதொட்டி குப்பத்தில் சர்ச்சை: மீண்டும் மோதல்
X

திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பத்தில் மீனவர் கிராமத்தில் தலைவரை மாற்றுவது குறித்து கடந்த மாதம் சர்ச்சை எழுந்த நிலையில் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அருகிலுள்ள திருவொற்றியூர் குப்பத்தில் தஞ்சமடைந்திருந்தனர். இதுகுறித்து காவல் துறைஅதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்பட்டது சென்னை மாநகர காவல் ஆணையர் அறிவுரைப்படி இருதரப்புக்கும் சமாதானம் செய்து மீண்டும் ஊருக்குள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது பெண்களில் ஒரு பிரிவினர் ராஜேந்திரன் என்பவர் வீட்டில் உள்ள பூந்தொட்டிகளையும் கண்காணிப்பு கேமராவையும் அடித்து உடைத்தனர். இதனால் ராஜேந்திரன் உட்பட நான்கு குடும்பத்தினர் மீண்டும் பலகை தொட்டி குப்பத்தை விட்டு வெளியேறிவிட்டனர். மீனவர் தலைவர்கள் இருதரப்புக்கும் சமாதானப் பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் 5 பெண்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 3 July 2021 9:12 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  4. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,260 மூட்டை பருத்தி ரூ. 30 லட்சம்...
  5. கலசப்பாக்கம்
    பருவத மலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்
  6. நாமக்கல்
    முட்டை விலை 30 பைசா சரிவு; கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சி
  7. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  9. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  10. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்