/* */

புரசைவாக்கத்தில் கணவன் மனைவியை கத்தியால் வெட்டிய ரவுடி கைது

சென்னை புரசைவாக்கத்தில் கணவன் மனைவியை கத்தியால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

புரசைவாக்கத்தில் கணவன் மனைவியை கத்தியால் வெட்டிய ரவுடி கைது
X

கைது செய்யப்பட்ட சிவா.

சென்னை புரசைவாக்கம் திடீர்நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் மனோகர் அலமேலு தம்பதியினர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த புரசைவாக்கம் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த சிவா 26 என்பவர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது தனது மனைவி கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு நீ தான் காரணம் என்று கூறி அலமேலுவை கத்தியால் தாக்கியுள்ளார். மேலும் இதனை தடுக்க வந்த அவரது கணவர் மனோகரையும் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் இருவரும் காயமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

இதுகுறித்து அலமேலு தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தலைமறைவாக இருந்த சிவா வயது 26 என்ற நபரை நேற்று காலை கைது செய்தனர்.

அவரிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சிவா மீது வழக்கு பதிவு செய்த தலைமைச்செயலக காலனி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 Feb 2022 6:14 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...