/* */

புளியந்தோப்பில் வீட்டின் ஜன்னல் வழியாக செல்போன்கள் திருட்டு

புளியந்தோப்பில் ஜன்னல்வழியாக 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை திருடிய நபர்களுக்கு போலீசார் விசாரணை

HIGHLIGHTS

புளியந்தோப்பில் வீட்டின் ஜன்னல் வழியாக  செல்போன்கள் திருட்டு
X

புளியந்தோப்பில் ஜன்னல்வழியாக 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை திருடப்பட்ட சம்பவம் தொர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை புளியந்தோப்பு வ உ சி நகர் 8வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி( 46 ). இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்ட நிலையில் அம்மா முருகம்மாள் மாமா எழிலரசன் மற்றும் தனது ஏழு வயது மகனுடன் ஜெகதீஸ்வரி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அனைவரும் வழக்கம்போல சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3 செல்போன்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜன்னல் வழியாக கைவிட்டு திருடர்கள் இந்த செல்போன் மற்றும் பணத்தை எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஜெகதீஸ்வரி, புளியந்தோப்பு குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 11 March 2022 6:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  2. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  3. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  4. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  5. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  6. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  7. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  10. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை