/* */

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை

ஆன்லைனில் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்த நிலையில் மீண்டும் மீண்டும் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்

HIGHLIGHTS

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை
X

பைல் படம்

சென்னை மணலியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன் (26) புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

மணலி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (26). ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி துர்கா. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பார்த்திபன் ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் பெருமளவு பணத்தை இழந்த நிலையில் மீண்டும் மீண்டும் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மிகுந்த கடன் தொல்லைக்கு ஆளாகியதாகக் கூறப்படுகிறது.

இவருக்குக் கடன் கொடுத்தவர்கள் கடன் தொகையைக் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் பார்த்திபன் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தனது மனைவி துர்காவை அவரது தாய் வீட்டுக்கு குழந்தையுடன் அனுப்பி வைத்து விட்டாராம். இதனையடுத்து புதன்கிழமை பார்த்திபனின் வீடு வெகுநேரமாகத் திறக்கப்படாததை அடுத்து அருகில் வசிப்போர் ஜன்னலை திறந்து பார்த்தபோது ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் பார்த்திபனின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வு செய்வதற்காக அரசு ஸ்டான்லி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மணலி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 30 Nov 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  3. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  4. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  5. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  6. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  7. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  9. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  10. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!