/* */

ஓட்டேரியில் டிடிவி தினகரனை கைது செய்யக்கோரி அதிமுகவினர் சாலை மறியல்

ஓட்டேரியில் டிடிவி தினகரனை கைது செய்யக் கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஓட்டேரியில் டிடிவி தினகரனை கைது செய்யக்கோரி அதிமுகவினர் சாலை மறியல்
X

ஓட்டேரியில் அதிமுகவினர் டிடிவி தினகரனை கைது செய்யக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்றனர். அப்போது அவர்கள் அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வரும்போது அமமுக தொண்டர்கள் ஒன்று சேர்ந்து ஓபிஎஸ் காரின் மீது செருப்பை கொண்டு எரிந்தும் எடப்பாடி பழனிசாமியின் காரை மறித்து தகராறில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிமுக சார்பில் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிமுக மூத்த தலைவர்கள் காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதை கண்டித்து இன்று மாலை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி மேம்பாலம் பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது.

திருவிக நகர் பகுதி செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியலில் பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அமமுக தொண்டர்களை கட்டவிழ்த்து விட்டு வன்முறையில் ஈடுபடும் டிடிவி தினகரனை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலைமைச்செயலக காலனி குடியிருப்பு போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி கலைந்து போகச் செய்தனர் இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 6 Dec 2021 12:31 PM GMT

Related News