தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7,427 பேருக்கு கொரோனா, 189 பேர் பலி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7, 427 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரேநாளில் 189 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7,427 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 24 லட்சத்து,29ஆயிரத்து 924 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக கோயமுத்தூரில் 891 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 189 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். இதன் மூலம் கொரோனாவால் சிகிச்சை பலன் இன்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 31,ஆயிரத்து,386 பேராக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனை சிகிச்சையில் 15,281 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 23 லட்சத்து,37 ஆயிரத்து, 209 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது தனியார் மற்றும் மருத்துவமனையில் 61,329 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.