Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க முடிவு..?
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தினால் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு வருகிறது.
50 சதவீதம் வரை நிறுவனங்கள், கடைகள் இயங்குகின்றன. பொது போக்குவரத்து மட்டும் முடங்கியது. இந்த நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதற்கிடையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை மட்டும் இயக்கவும், இத்திட்டத்தை துவங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மாவட்டங்களுக்கு இடையே மட்டும் பேருந்து சேவை இயக்கப்படுவதாக அரசு முடிவு செய்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.