Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
கறைபடியாத கரங்கள்: துாய்மை பணியாளர்களின் நேர்மை
துாய்மை பணியாளர்களின் நேர்மையை பாராட்டி சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கினர்.
HIGHLIGHTS
சென்னை, அடையாறு, கஸ்துாரி பாய் நகரில், பழனியம்மாள், சமீபத்தில் துாய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, சாலையில், ரூ.50 ஆயிரம் ரூபாயுடன் பணப்பை கிடந்தது.அதை எடுத்த பழனியம்மாள், மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன், உரியவரிடம் ஒப்படைத்தார்.
அதேபோல், கோடம்பாக்கம் அனுமான் சாலையில் துாய்மை பணி மேற்கொள்ளும்போது, சாலையில் கிடந்த, ரூ.20 ஆயிரம் ரூபாயை, துாய்மை பணியாளர் எடிசன், உரியவரிடம் ஒப்படைத்தார். இவர்களின் நேர்மையை பாராட்டி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, ரிப்பன் மாளிகை அழைத்து சான்றிதழ்களை வழங்கினார்.அப்போது மாநகராட்சி துணை கமிஷனர் மணீஷ் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.