Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
வகுப்புகள் நடத்தினால் கடுமையான நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், 12-ம் வகுப்பை தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில பள்ளிகள் 9,10 உள்ளிட்ட சில வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வர வைப்பதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை தலைமை செயலர், எந்த காரணத்துக்காகவும், 12-ம் வகுப்புக்களை தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்க கூடாது என்றும், உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.