/* */

நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஹரி நாடார் கோர்ட்டில் ஆஜர்

நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஹரி நாடார் சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

HIGHLIGHTS

நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஹரி நாடார் கோர்ட்டில் ஆஜர்
X

ஹரி நாடாரை சென்னை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

பண மோசடி வழக்கில் பெங்களூரு சிறையிலிருந்த பனங்காட்டு படை கட்சி தலைவர் ஹரி நாடாரை , நடிகை விஜயலட்சுமி கொடுத்திருந்த புகார் தொடர்பான விசாரணைக்காக தமிழகம் அழைத்து வந்த திருவான்மியூர் காவல்துறையினர் இன்று சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணையின் நிறைவில் 15 நாள் நீதிமன்றக் காவல் வழங்கி தீர்ப்பளிக்கப்படது. எனவே ஹரி நாடார் பிப்ரவரி 3 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட உள்ளார்.

கடந்த 2020 ம் ஆண்டு ஜூலை மாதம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றம்சாட்டி , தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி , சீமானுக்கு ஆதரவாக தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஹரி நாடார் மீது புகாரளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹரி நாடாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறையினர் தரப்பில் நீதிபதியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில் , நாளை காலை 10 மணிக்கு சைதாபேட்டை நீதிமன்றத்தில் அது தொடர்பான விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  2. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  4. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  5. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  6. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  9. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  10. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு